Friday, June 1, 2007

புயல் குறிப்பு


இளமை என்னை
இம்சை செய்ய
காதல் அருமருந்தென
யார் மொழிய கேட்டோ
கள்வனே! உன்னிடத்தில்
இதயம் தொலைத்தேன்

உன் நோக்கம்
அது புரியாமல்
நெக்குருகி நான் கிடக்க
லீலைகள் தொடங்கிடும்
வேலைகள் நீ செய்தாய்...
காதலின் போர்வையில்
தேரையாய் ஊர்ந்தாய்
காரியம் புரியவே
கைங்கரியம் செய்தாய்
மஞ்சம் அழைக்க
மண்டியிட்டாய்...
கண்ணீர் காட்டி
கடைசியில் வென்றும் விட்டாய்!

புகழ்மொழி பேசி
உயிர்வழி புகுந்தாய்
உன் கற்பனை வரிகளை
என்னை காகிதமென்றாக்கி
எழுதினாய்!
பூ நசுக்கி
வாசனை நுகர்ந்தாய்
புருவம் மென்று
பெருவலி தந்தாய்
உமிழ் நீரில் என்னை
குழைத்து இன்னோர்
உருவம் செய்யத் துடித்தாய்!

நூலிழையில்
வேரினை பதித்தாய்
விழுதினை வளர்க்க
என் வெற்றிடம் பறித்தாய்...
விசயம் முடிந்ததும்
விசமம் செய்கிறாய்
வேசியம் கற்பித்து
எச்சமென்று ஏசுகிறாய்
வா! வந்து என் கறைபோக்க
வழிவகை செய்
இல்லையேல்,
உனக்கு கதி என்றாக்கிவிடுவேன்
காவல் துறையின் சிறையை...
-நாவிஷ் செந்தில்குமார்

1 comment:

Anonymous said...

நூலிழையில்
வேரினை பதித்தாய்
விழுதினை வளர்க்க
என் வெற்றிடம் பறித்தாய்...

kathi mele nadapathu pondra
migavum nasukana varikal...

Thanks
Ravi