Tuesday, May 22, 2007

அம்மா...


அம்மா...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராக
உனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...

உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...

உனக்கு கொள்ளி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?

பத்து திங்கள்
எனை சுமந்து
பெற்றெடுத்த பெருமைக்கு
என்ன நான் செய்தாலும்
எள்ளளவு கை மாறே!

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!

விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...
—நாவிஷ் செந்தில்குமார்

12 comments:

வினோத்குமார் கோபால் said...

Nice one Senthil
Keep Writing

http://vinothsoft.googlepages.com/

http://vinothsoft4u.blogspot.com/

செந்தில் நாதன் Senthil Nathan said...

Nice one.........

Pidithathu:

உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்
நடை பயின்றேன்...

Prema said...

very nice
kadhalukkum mattum illamal
amma kum importance koduthu irukkenga

விண்ணை முட்டும்
புகழ் தொடுவேன்
உந்தன் பெயரை
அங்கே முழங்கிடுவேன்...
எதிரொலி கேட்கும்
எந்தாயே...
எந்தன் பிள்ளை
பெருமை கேள் என
எதிரியிடத்தும் போய்
சொல் நீயே...

Im sure ur amma really proud of u.

excellant job
keep on writing........

Kanaka said...

Nice One Senthil I have become your fan by seeing your kavithaikal
keep on writing

Shangaran said...

கவிதை உணர்வுப்பூர்வமா இருந்தது.

நேசமுடன்,
சங்கரன்.
http://shangaran.wordpress.com

Anonymous said...

Senthil,

Very beutiful poem...

Esp. these lines...

உனக்கு கொல்லி வைக்க
பிள்ளைகள் சிலர் உண்டு
என்னை அள்ளி அனைக்க
வேறு தாய் உண்டோ?

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது!

One should feel these lines to find the real beauty in this.
Well done.

-Jayarani Muthukumar

Anonymous said...

In Every word i feel my mother's love

Nice

Keep it..........

All the best

Unknown said...

தாயின் பாசத்தை அறிந்திராத எனக்கு உங்கள் கவிதை மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது... மிகவும் அருமை.... எட்டுத்திட்டும் வீச‌ட்டும் உமது கவிதைப் புயல்...
வாழ்த்துக்களுடன்....
கே.வி.எஸ். சக்திவேல்

dfgdf said...

பார்த்த படித்த
ரசித்த விமர்சித்த
அனைவருக்கும் நன்றி...
தயவு செய்து
உங்கள் மின்னஞ்சல்(Email id) முகவரியையும்
எழுதவும்...
This will help me to contact you all...
sakthi plz give me ur email id..

kavi said...

nice kavithai Senthil....
Especially these lines...

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது

kavi said...

very nice Senthil.....

உன் நினைவு மறக்கும்
வேளை ஏது
மறந்தால்...
நான் இறக்கும்
நாளே அது

Senthilkumar said...

Thanks for ur comments kavi..