Saturday, June 2, 2007

கவிஞன்


தமிழ் நனைந்த தேசத்தில்
புறம் வந்த
புற்றீசலாய்
சொற்களின் தேரில் ஏறி
நீண்ட நெடிய
கவிதைப் பாதையில்
உலாவர புறப்படுகின்றேன்...
வாழ்க்கையின் உரைநடையை
கவிதையாக்கத் துடிக்கின்ற
மனிதன் நான்
நிகழ்காலத்தை நிர்மூலமாக்கி விட்டு
எதிர்காலாம் பற்றிய கனாக்களில்
எண்ணங்களில் லயிக்கிறேன்
அகம் நிரம்ப
அழுக்குப் பட்டுக் கிடக்க
புறம் ஒன்று பேசி
புகழ் நிறைய ஈட்டுகின்றேன்
என் வீட்டில் உலை கொதிக்க
உ லை கொதிக்காத வீட்டுக்காரன்
குரலில் பேசுகிறேன்
ஆடை அணிகலன் சேர்க்க
நிர்வாணங்களை
பேசிப் புகழ்கிறேன்
வயல் வெடிப்புகளை
கண்ணீரால் பூசி
கவிதை எழுதத் துடிக்கிறேன்...
சுயத் தோடு போரிட்தேன்
நயமாய் நானும் உணர்ந்திட்டேன்
அவனுக்கு முன்னால்
நாமெல்லாம் பொம்மைகள்
என்கிற உண்மையை
உணர்ந்து
கர்வத்தைக் தொலைக்கிறேன்
காலம் எனையொருநாள்
மாற்றும்
கவிஞன் எனும்
பதத்தின் பொருளைப் புகட்டும்
காலத்தின் பார்வையில்
என் கவிதை வரிகள்
தூசுத்துகள் என
கம்பீரமாய் சொல்வேன்
காலத்தைப் போல் ஒரு
கவிஞன் இல்லையென...
---நாவிஷ் செந்தில்குமார்

2 comments:

kirthee said...

Neegal oru seraindha kavegan yainbathairku edhu oindra podhum.

செல்வேந்திரன் said...

nalla sinthanai ..Paarattukal