Saturday, February 6, 2010

முடியாதவர்கள்

பூஞ்செடி கொடிகளை
அழகாக வெட்டி
நீர்பாய்ச்சி வளர்க்கும்
தோட்டக்காரனாக
00
ஆளில்லாதபோது
இரவுமுழுவதும் விழித்திருந்து
வீட்டைப் பாதுகாக்கிற
காவல்காரனாக
00
குவிந்து கிடக்கிற
துவைத்த ஆடைகளை
சலவை செய்துதருகிற
சலவைக்காரனாக
00
மளிகைச்சாமான்கள்
காய்கறிகள்
மாமிசம் வாங்குகிற
எடுபிடியாக
00
மலக்கறை படிந்த
கழிப்பறைக் கோப்பைகளை
தேய்த்துக் கழுவுகிற
கூலிக்காரனாக
00
குழந்தைகளைப்
பள்ளிக்கு அழைத்துபோகிற
பக்குவமாகப் பார்த்துக்கொள்கிற
ஆண் ஆயாவாக
00
உண்டு மிஞ்சியதைத்
தின்று வாழ்கிற
உயர்திணை நாயாகக்கூட
இருக்க முடிகிறது!
00
வயதான கிழவன்களால்
பெரும்பாலான வீடுகளில்
தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
**************************************
எதிர்வீட்டுக் குழந்தை
வாழ்க்கைப்பாடம்
படிக்கிறது...
பப்பி - உயர்திணை
தாத்தா - அஃறிணை
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : கீற்று.காம்

10 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சூப்பர் தம்பி

செந்தில் நாதன் Senthil Nathan said...

:)

//தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
//

உண்மை தான்...வருத்தமான விஷயம்..மத்தபடி கவிதை ரெம்ப புடிச்சது..

விநாயக முருகன் said...

முத‌ல் கவிதை அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

வார்த்தைகளில் இருக்கும் உண்மை மனதை சுடுகிறது செந்தில்...:-(

Senthilkumar said...

@ க.நா.சாந்தி லெட்சுமணன்
நன்றி சகோதரி!

@வினய்
நன்றி வினய்!

@செந்தில் நாதன்
நன்றி நண்பா!
:)

@கார்த்திகைப் பாண்டியன்
நன்றி நண்பரே!

Unknown said...

verumena excellentnu sonna pothuma..!!

அகநாழிகை said...

கவிதைகள் அருமை. வாழ்த்துகள்.

Senthilkumar said...

நன்றி ஆறுமுகம் முருகேசன்!

@அகநாழிகை
நன்றி வாசு!.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்ல கவிதைகள் நாவிஷ்!

நன்றி, விநாயகம்.

க ரா said...

ரொம்ப நல்லா இருக்கு செந்தில்.