Friday, January 29, 2010

விசித்திரப் பறவை

இரண்டு மாதங்களுக்கு
முன்னொரு நாளிலிருந்து
எங்கள் வீட்டிலொரு
பறவை வசிக்கிறது
பகலில் தூங்கி
இரவில் விழிக்கிற
பறவை அது

பறக்கும்போது
சிக்கிப் பலியாகிவிடுமென்பதால்
காற்றாடியைப்
பயன்படுத்தமாட்டோம்
வழிதவறி
வெளியே சென்றுவிடுமென்று
கதவு ஜன்னல்களைக்
கவனமாகத் தாழிட்டுவிடுவோம்
அதன் எச்சம்
படுவதைத் தவிர்க்க
போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம்...

அலுவலகம் செல்ல
ஆறுமணிக்கு
எழுந்து குளிக்கிற நண்பன்
அதன் சேட்டைகளைப்பற்றி
நிறையச் சொல்வான்
நான் எழுகின்ற நேரத்தில்
நன்றாக
உறங்கத்தொடங்கிவிடும்
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : கீற்று.காம்

8 comments:

PPattian said...

அது ஒரு BPO பறவையா.. :)

கவிதை நல்லாருக்கு

Senthilkumar said...

நன்றி புபட்டியன்...
அந்தப் பறவை 'குளிர்' என்ற பார்வையில் படித்துப் பாருங்கள்.
:)

கார்த்திகைப் பாண்டியன் said...

குளிருக்கு இப்படி ஒரு உருவகமா? நீங்க சொல்லித்தான் நண்பா புரியுது.. நல்லாயிருக்கு..:-)))

Senthilkumar said...

மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்!
:)

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லா இருக்கு..நண்பா. ஆனா இந்த மரமண்டைக்கு மூணு தடவ படிச்சும் 'குளிர்' தோணவே இல்ல..

அப்புறம், எங்க ஊர்ல அந்த பரவ தூங்கவே மாட்டேங்குது மூணு மாசமா..

Senthilkumar said...

நன்றி செந்தில்

Unknown said...

stunning.. :)

Senthilkumar said...

நன்றி செந்தில் ஆறுமுகம் முருகேசன்.