Monday, January 11, 2010

சகுனம்

கடினமான வேலை
கடிந்துகொண்ட மேலாளர்
எப்போதுமில்லாத
உடற்சோர்வு என
எதுவுமே சரியில்லை...
காரணமென்னவென யோசிக்கையில்
காலையில் குறுக்கே சென்ற
கறுப்புப் பூனை
கண் முன்னே வந்தது...
வீடு வந்ததும்
எதிர்வீட்டுப் பூனை
இறந்ததுபோனதென
அறைநண்பன் சொன்ன செய்தியால்
'காலையில் என் முகத்தில்தான்
முதலில் விழித்ததோ?' என்ற
கேள்வி எழுந்தது

நன்றி : கீற்று.காம்

6 comments:

PPattian said...

ம்.. பாவம் அந்தப் பூனை.. நல்ல கவிதை

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் நண்பரே

நல்லா இருக்கு கவிதை

மாதேவி said...

நல்ல சிந்தனைக் கவிதை நாவிஷ்.

Senthilkumar said...

//
பாவம் அந்தப் பூனை.. நல்ல கவிதை
//
நன்றி புபட்டியன்!

Senthilkumar said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!, நேசமித்திரன்.

//
நல்ல சிந்தனைக் கவிதை நாவிஷ்.
//
நன்றி மாதேவி!

பிரதீப் said...

hi senthil,

ungal kavithaigal ellaam arumai! naanum CTS thaan. ithe mathiri naanum oru kavithai ezhuthi irukkiren.

"poonayin kurukke naan,
atharku eli kidaiththatho illayo!"