Sunday, January 3, 2010

நாய்கள் மொழி!

மனிதர்கள்
**************************************
கால்சட்டைப்பையில்
கற்களை நிரப்பிக்கொண்டு
காலையிலிருந்து அலைகிறான்
சிறுவன் ஒருவன்
குருவியைத்தேடி...
அவனது இலக்கு
பச்சோந்தியாக இருந்திருந்தால்
ஊரில் இழவுகள்
பல விழுந்திருக்கும்!

நாய்கள் மொழி!

**************************************
பசியென்று
சோறுகேட்டு வந்தவனிடம்
எதுவும் இல்லையென்று மட்டுமே
சொல்ல முடிந்தது
மனிதர்களால்...
வீதி நாய்கள் தான்
குரைத்துச் சொல்லின
'உன் அழுக்குச் சட்டை
கிழிந்திருக்கிறது' என
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : வார்ப்பு.காம்

3 comments:

Unknown said...

arumai.. :)

Senthilkumar said...

நன்றி ஆறுமுகம் முருகேசன்...

கமலேஷ் said...

நாய் மொழி மிகவும் அருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...