Saturday, May 23, 2009

பூச்சியங்களுக்கு மதிப்பில்லை!

50
500 ஆகி - பின்
5000 என்றாகி,
50000 என
ஏறிக்கொண்டே போகிறது
ஈழத்தில்
இறந்த உயிர்களின்
எண்ணிக்கை!

இலக்கங்கள் கூடியும்
இரக்கமில்லையா
வல்லரசுகளே?

இடப்பக்கம் மட்டுமல்ல
ஈழத்தமிழன் என்றால்
வலப்பக்கம் வந்தாலும்
பூச்சியங்களுக்கு
மதிப்பில்லையோ?