Wednesday, August 22, 2007

அன்னப்பறவை


அன்னப்பறவை இனம்
அழிந்து போனதாக
சொல்கிறார்கள் - இன்னும்
உன்னை பார்க்காதவர்கள்...
தேவதையின் கனவில்
பேய்கள்தான் வரும்
என சொல்வார்கள்
எனவேதான் உனக்கு மட்டும்
டெவில் ட்ரீம்ஸ்
சொல்கின்றேன்.
எல்லோருடைய வாயிலிருந்து
வார்த்தையாக வருவது
உன்னிடம் மட்டுமே
வரமாக வருகிறது.
பூக்களின் தேன்
குடித்து சலித்துப் போன
வண்டுகள் - உன்
வியர்வையை சுவைத்து
வாழவே ஆசைப்படுகிறதாம்!
நீ தூங்கினால் - உன்
கனவாக வேண்டும்
துயில் கலைந்தால் - உன்
நினைவாக வேண்டும்
உன் இதழ் நடுவில்
இளைப்பாறும்
காற்றாக வேண்டும் - உன்
விரல் சொடுக்கில்
வெளியாகும்
ஒலியாக வேண்டும்.
பார் ரதியே!
உன் அழகை பாடினால்
எக்கவியும்
பாரதியே!..
--நாவிஷ் செந்தில்குமார்

2 comments:

Anonymous said...

hiiiiiiii

Anonymous said...

Great :)