Friday, July 31, 2009

நண்பன்!

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...

"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...
--நாவிஷ் செந்தில்குமார்

7 comments:

Anonymous said...

very touching nanba

Suresh Kumar said...

அருமை செந்தில் ... கண் கலங்க வச்சிடிங்க போங்க...

உண்மை கவிதையாய்...

வாழ்த்துக்கள்...

Vidhoosh said...

போட்டோ அருமைங்க.
ரொம்ப கலங்கடிச்சுடீங்க நண்பரே. இன்ன்னும் வயிறு பிசைந்து ஏதோ இம்சித்துக் கொண்டே இருக்குங்க.

-வித்யா

Vidhoosh said...

:)

Senthilkumar said...

நன்றி அனானி, சுரேஷ் மற்றும் வித்யா.

Ezhil... said...

அருமை நண்பனே... என் நண்பன் இதே வரிகளை என்னிடம் நிஜமாய் கூறியிருக்கிறான் ..
நட்பின் நினைவும் நிழலும் என்றும் சுகந்தம்...

நட்புடன்..
எழில்

Senthilkumar said...

வருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி, எழில்!