Thursday, January 15, 2009

காட்சிகள் இரண்டு தோற்றம் ஒன்று

இரு சக்கர வாகனத்தில்
பச்சை விளக்குக்கான
காத்திருப்பில்
நீலப்படம் ஒன்று...
காது கடிக்கும் இதழ்கள்
மார்பு சுமக்கும் தோள்
முன்னிடை கீழ்ப் பிடிக்கும் கைகள்...
வேண்டாம் இவர்கள்
காதல் மிச்சம்
சொன்னால்
விழுந்ததாய் உணர்வீர்
காக்கை எச்சம்.
***********************************************
சாலையோரப்
பெருமரமொன்றினருகில்
பின்னிருகால்கள் பரப்பி
ஏதுவாய் நின்றது
ஒரு நாய்
எம்பிப் புணர்ந்தது
இன்னொரு நாய்.

--நாவிஷ் செந்தில்குமார்

No comments: