வேளச்சேரி பாரதிநகரில்
கொலை நிகழ்வுகள்
அரங்கேறியிருக்கின்றன
கடந்த வாரத்தில்
நான் ஊரில் இல்லாத
சனி ஞாயிறு அன்று
தெரியாதவர்கள் உள்ளிட்ட
எனக்குப் பரிட்சயமான
நண்பர்களும்
சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்
ரகுவின் கழுத்து
கைகால்களை அறுத்து
அப்படியே போட்டிருந்தார்கள்
பிரியங்காவை ஒரேயடியாகச்
சாய்த்திருந்தார்கள்
சிவாவின் உயிர் வாசனை
இன்னும் அடங்கியபாடில்லை
திவ்யாவின் சடலத்தை
ஒரு பழைய ஊர்தியில்
இன்று காலையில்தான்
ஏற்றினார்கள்...
குறிப்பு ஒன்று
மேலே சொன்ன
பெயர்கள் யாவும்
அவர்களின் இயற்பெயர் அல்ல
நான் அவர்களுக்குச்
சூட்டிய செல்லப்பெயர்கள்
குறிப்பு இரண்டு
இவர்கள்
மனிதன் என்பவருக்கு
மனிதன்
மரம் என்பவருக்கு
மரம்.
நன்றி : கீற்று.காம்
இரண்டாவது வார்த்தையில் இறந்துபோனவன்
13 years ago
13 comments:
நல்லா பயந்துட்டேன் போங்க!.. மரங்கள் குறித்து கவலைதான்.. எதற்காக வெட்டினார்கள்?
வேளச்சேரி - பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் சாலையை அகலப்படுத்துவதற்காக...
:(
wooow
நிகழ்வுக்கு சோகமாயொரு பின்னூட்டமும்.. நன்றி..
எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு செந்தில் நீங்க சொன்ன விதம்...!!
அன்பு நாவிஷ்,
ரொம்ப அழகான கவிதை... வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்னு நெக்குருகிப் போனேன் படித்த போது.
அன்புடன்
ராகவன்
நல்ல கவிதை நாவிஷ்!
நன்றி ஆறுமுகம் முருகேசன், Kannan, ராகவன் மற்றும் பா.ரா!
nanbare ,aanantha vigadanil ungalathu kavithai padithen, arumai.
punnagai kavithai migavum arumai..
அற்புதம்!
Very good perspective.....
kalakkal ponga.
நல்ல கவிதை-kosindra
Nalla kavithai nanba
Post a Comment