Tuesday, March 10, 2009

யார் சொன்னது?

யார் சொன்னது
தன் வினை
தன்னைச் சுடும் என்று?
பொறுப்பில்லாதவன்
புகைத்த பின்
அணைக்காமல் போட்ட
வெண் சுருட்டு
செருப்பில்லாதவன்
காலையல்லவா சுட்டது!

யார் சொன்னது
குடி குடியைக் கெடுக்குமென்று?
குடி போதையில் ஒருவன்
பள்ளிச் சிறுமியைக்
கெடுத்தான் என்று
நாளிதழ் ஒன்று
செய்தி சொன்னது!

யார் சொன்னது
மது வீட்டுக்கு
நாட்டுக்கு உயிருக்கும்
கேடு என்று?
ஆதாயம் இல்லாமலா
அரசாங்கமே
விற்பனை செய்யுது?
–நாவிஷ் செந்தில்குமார்

No comments: